Friday, July 6, 2012

புனித நூலான குரானை, 12 மணிநேரத்தில் பார்க்காமல் ஓதி மகாராஷ்டிரா மாணவர் சாதனை

போபால் : இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை, 12 மணிநேரத்தில் பார்க்காமல் ஓதி மகாராஷ்டிரா மாணவர் சாதனை படைத்துள்ளார். தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித்தை சேர்ந்த மாணவன் ஹபீஜ் முகம்மது ஜபியுல்லா, புனித நூலான குரானை 8 மாதத்தில் முழுதாக மனப்பாடம் செய்தார். இன்று அவர் பீர் சயீத் ஷகாப் மவுலானா நாத்வி உள்ளிட்டோர்களின் முன்னிலையில், குரானை பார்க்காமல், 12 மணிநேரத்தில் முழுவதுமாக ஓதி சாதனை படைத்துள்ளார். காலை 8 மணிக்கு துவங்கிய அவன், இரவு 8மணியளவில் முழுவதுமாக ஓதி முடித்தான். இவனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes