Wednesday, May 30, 2012

First News of Independent INDIA


16-Aug-1947 First News of Independent INDIA.
A very Rare pic. All Indians should Share this..

உலகப் புகழ் பெற்ற மார்ஷியன் வைரம்


ஹாங்காங்: உலகப் புகழ் பெற்ற வைரங்களில் ஒன்றான மார்ஷியன் பிங்க் வைரம் ரூ. 95 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.
ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் இந்த வைரம் ரூ. 95,44,87,926க்கு ஏலம் போனது. எதிர்பார்க்கப்பட்ட விலையை விட இது சில மடங்கு கூடுதலாகும். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வைரம் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. 1976ம் ஆண்டு ஹாரி வின்ஸ்டன்தான் முதலில் இதை விற்றார். செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா விண்கலத்தை அனுப்பியதை கெளரவிக்கும் வகையில் இந்த பிங்க் நிற வைரத்துக்கு மார்ஷியன் என பெயர் சூட்டப்பட்டது. உலக அளவில் மிகப் பெரிய பிங்க் நிற வைரம் இதுதான்.
இந்த வைரம் ஹாங்காங்கில் ஏலத்திற்கு வந்தபோது பலரையும் இது ஈர்த்தது. ஏலத்தில் இதன் தொகை உயர்ந்து கொண்டே போய் கடைசியில் ரூ. 95 கோடிக்கு இது எடுக்கப்பட்டது. இதை ஏலத்தில் எடுத்தவரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலமே மொத்தம் 10 நிமிடங்கள்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஏலத்திற்குப் பெயர் போன நகரங்கள் நியூயார்க்கும், லண்டனும்தான். தற்போது ஹாங்காங்கும் அதற்கு இணையாக வளர்ந்து வருவதை இந்த ஏலம் நிரூபித்துள்ளது.

இலெமூரியா

19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது. 20ம் நூ. முன்னேயே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.

அறிவியல் கூற்றுகள்

இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர்என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர்.அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள்(விஞ்ஞானிகள்) இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர்.அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப் பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது.

பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

"பிலாவற்ஸ்கி"அம்மையாரின் இலெமூரியா

1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார்.ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வினமானது இன்றைய ஜந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில லெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும்

1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).

குமரிகண்டமும் இலெமூரியாவும்

குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர்.

Sunday, May 27, 2012

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்

லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.

கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

Wednesday, May 23, 2012

41 மெகா பிக்ஸெல் போன்

கார்ல் ஸெய்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, நோக்கியா தன் பியூர் வியூ 808 மொபைல் போனில், 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவினைத் தர இருக்கிறது. இந்த மொபைல் போன் மே மாதம் முடிவடைவதற்குள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் இது விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம் இந்த கேமரா வாகத்தான் இருக்கும். இந்த கேமராவில் HD 1080p வீடியோ பதிவு மற்றும் இயக்கும் வசதி கிடைக்கிறது. இதன் ஸ்டீரியோ ஆடியோ டோல்பி ஹெட்போன் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதன் 4 அங்குல AMOLED CBD டிஸ்பிளே திரை கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதன் மற்ற சிறப்பம்சங்களாக, NFC, Stereo FM Radio with FM transmitter, HDMI, 3G, Bluetooth 3.0, WiFi b/g/n, DLNA, aGPS ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் பேட்டரி 1400 ட்அட திறன் கொண்டதாகும்.இதனைத் தொடர்ந்து விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை இதே திறன் கொண்ட கேமராவுடன் வழங்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடந்த பன்னாட்டளவிலான மொபைல் போன் கருத்தரங்கில், பியூர் வியூ போன் காட்டப்பட்ட போது பலரும் அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஆர்வம் காட்டிப் பாராட்டினர். எனவே இந்த போனை பல நவீன வசதிகளுடன் தர நோக்கியா திட்டமிடுகிறது.

மிகச் சிறிய அளவில் சலவை இயந்திரம்

நம் ஆடைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சலவை இயந்திரம் தற்போது மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
180 கிராம் நிறையை கொண்டுள்ள இந்த சலவைப்பையானது இடத்திற்கு இடம் எடுத்துச் செல்ல முடியும் என்பது விசேட அம்சமாகும்.
இதில் ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லிட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சாம்போ, சலவை தூள்கள் போன்றவற்றை பயன்படுத்தி 20-40 நொடிகளில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லஸ் இதயம் கண்டு பிடிப்பு

ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில் எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.
தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.

வாழைப்பழம்


 ‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.

வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பூரான் கடிமுதலுதவி மருந்து

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

Facebook search

Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் மாய உலகம். கண்ணால் காணாமலே நட்பு பாராட்டும் இடம். இதில் பலருக்கு அவர்களின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்பொழுது அதையும் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த வசதி Googleஇன் உதவியுடன் வழங்கப் படுகிறது. இதற்கு பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்.

http://apps.facebook.com/nearbyfriends/

இது Facebook ன் ஒரு application ஆகும். சரி இது எப்படி செயல்படுகிறது . உங்கள் நண்பர்களின் நாடு, மற்றும் எந்த ஊர் என்பதை எடுத்து google map ன் உதவியுடன் உங்களுக்கு அவர்களுடைய இடங்களை Map ல் குறியிட்டு காட்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்.

http://wheremyfriends.be

Tuesday, May 22, 2012

உலகின் பணக்காரநாடு கத்தார்

துபாய் : உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

Monday, May 21, 2012

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


தஞ்சை பெரிய கோயில் & தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் 


கட்டப்பட்டது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 


வயது பூர்த்தியாகியது. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் 


மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி 


இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும் நாயக்கர் கால ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. அஜந்தா ஓவியங்களைப் போல இவையும் புகழ்பெற்றவை.


தாராசுரம்


தஞ்சையில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள கோயில் இது. சிவபெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலை இராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர் தாராசுரம்.


மகாமகம் திருநாள்


கும்பகோணம் மகாமகக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாபெரும் திருநாள் ஆகும். வழக்கமாக மாசிமாதம் பௌர்ணமி அன்று மகாமகம் வரும். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு 


மகம். இந்த மகாமகத் திருநாளின் போது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்தக் குளத்தில் புனித நீராட கூடுவார்கள். தொலைபேசி: - 0435-2420276.


நாயக்கர் தர்பாரஹால் அருங்காட்சியகம் மற்றும் இராஜராஜ சோழன் அருங்காட்சியகம்


இரண்டு அருங்காட்சியகத்திலும் சோழர்கால சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அற்புதமான செப்பு சிற்பங்களை இங்கு காணலாம்.


சரபேஸ்வரர் ஆலயம்


கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருப்புவனத்தில் இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியுள்ளான். இந்த தெய்வத்தை வந்து வழிபட்டால் 


பில்லி சூனியம் போன்ற கேடுகள் அகலும் என்பது நம்பிக்கை.


சிவகங்கைப் பூங்கா


தஞ்சை பெரிய கோயிலின் வடபுறமாக உள்ளது. அழகிய செடிகள், மலர்கள், பறவைகள் விலங்குகள் இன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


பூண்டி மாதா கோயில்


மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்கத் தேவாலயம். தொலைபேசி: - 04364 - 265426.


இராஜராஜன் மணி மண்டபம்


தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் இது அமைந்துள்ளது.


கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபம்


விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தன் கவிதைகளை ஏழை எளிய பாட்டாளி மக்களுக்காகவே அர்ப்பணித்த மக்கள் கவிஞர் 13.4.1930 இல் பிறந்து 29 வயதிலேயே அமரர் ஆகிவிட்ட இந்த மகாகவியின் 


நினைவு மண்டபம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் நாடியம்மாள்புரத்தில் அமைந்துள்ளது.


புலியூர் வியாகரபூரீஸ்வரர் கோயில்


நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில் இராமர் மடம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி முக்கால் கி.மீ. வடக்கு நோக்கிச் 


சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். காமதேனு பசு இங்குள்ள சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. தென் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாகரபுரி என்று இந்த ஊருக்கு மற்றொரு 


பெயரும் உண்டு.


சரஸ்வதி மஹால் நூலகம்


இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகள் பாதுகாக்கப்படும் முக்கியமான நூலகம் இது. கி.பி. 1700 களிலேயே தொடங்கப்பட்ட மிகப் பழமையான நூலகம். 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 


சுவடிகள் இங்கு உள்ளன. இவற்றில் 80 சதவிகிதம் வடமொழியில் எழுதப்பட்டவை. தொன்மையான இசைக் கருவிகளும், சிற்பங்களும் இந்த அருட்காட்சியத்தில் உள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கம், 


ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள நூலகம். தொலைபேசி: - 04362-233568.


ஸ்வார்ட்ஸ் தேவாலயம்


டச்சு கிறிஸ்தவ மதபோதகர் ரெவ.சி.ஷி. ஸ்வார்ட்ஸ் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதமாக மன்னர் சரபோஜியால் கட்டப்பட்ட தேவாலயம். அரண்மனைத் தோட்ட வளாகத்தில் இது 


அமைந்துள்ளது.


தமிழ்ப் பல்கலைக் கழகம்


1981 இல் தமிழுக்கென்று நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் 


உள்ளன. தொலைபேசி - 04362-226518.


சுவாமிமலை


முருகனின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. தஞ்சையிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. தந்தைக்கே 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைச் சொல்லித் தந்த தனயன் முருகன் குடி 


கொண்டிருக்கும் கோயில். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருத்தலம்.


தஞ்சை ஓவியங்கள்


புன்னகை ததும்ப நின்று கொண்டிருக்கும் கிருஷ்ணன் படத்தைப் பார்த்திருப்பீர்கள். தலைசிறந்த தஞ்சை ஓவியத்துக்கு இதுதான் எடுத்துக்காட்டு. கண்ணாடிகளிலும், அட்டைகளிலும், சுவர்களிலும் 


தஞ்சை ஓவியத்தின் வேலைப்பாடுகளைக் காணலாம். இந்த ஓவியங்களில் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் பதிக்கப்பட்டிருக்கும். ஜிப்சம் மற்றும் வஜ்ரத்தால் பூசப்பட்டு 


மெருகூட்டப்பட்டு இருக்கும்.


தஞ்சாவூர் அரண்மனை


நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டு 


அரசவைக்கு இட்டுச் செல்லும். அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டின் தெற்குப்புறத்தில் 190 அடி உயரத்தில் எட்டு 


அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. இதுவே இந்த அரண்மனையின் கண்காணிப்புக் கோபுரமாகவும், ஆயுதக் கிடங்காகவும் கி.பி. 1855 வரை இருந்து வந்துள்ளது.


புன்னைநல்லலூர் மாரியம்மன் கோயில்


தஞ்சை நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. தொலைபேசி: - 04632-267740.


திருவையாறு


சங்கீத மும்மூர்த்திகளில் மூத்தவரான தியாகராஜர் இங்கு தான் வாழ்ந்தார். இங்குதான் சமாதியும் அடைந்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 8 நாட்கள் இவர் நினைவாக இசைத் திருவிழாவே இங்கு 


நடந்தேறும்.


திருபுவனம் கோவில்


தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை வழியொற்றி குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள ஒரு கல்வெட்டு, இங்குப் பல்கலைக் கழகம் இருந்ததை உறுதி செய்கிறது. தஞ்சையிலிருந்து 45 கி.மீ. 


தொலைவில் உள்ளது. தொலைபேசி: - 0435-2460760.


மனோரா கோபுரம்


1814 ஆம் ஆண்டு மாவீரன் நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சுப் படைக்கும், ஆங்கிலேயருக்கும் ஒரு கடல் போர் நடந்தது. இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சரபோஜி மன்னரின் 


படைகளும் போரிட்டன. அப்போது நெப்போலியனின் படை தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக சரபேந்திரராஜ பட்டினம் கடற்கரையில் 120 அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கப்பட்டது. 


அறுகோண வடிவமுள்ள இந்தக் கோபுரத்தின் உச்சியை அடைய 120 படிகள் உள்ளன. 150 ஆண்டுகளாக உறுதியுடன் நிற்கிறது. பட்டுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.


கும்பகோணம்


கும்பகோணம் தமிழகத்தின் கோயில் நகரம் என்று கூறுவர். சென்னையிலிருந்து 313 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 90 கி.மீ. தொலைவிலும் தஞ்சையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் 


உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் இரண்டாவது சூரியனார் கோயில் இதன் அருகில்தான் உள்ளது.  சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் 


தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் பல கோயில்கள் உள்ளன. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும் 


பாக்கும் விளைகிறது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.


சைவ சமயத்தினர் வழிபடும கோயில்களில் முக்கியமான ஆதிகும்பேஸ்வரர் கோயில் இந்நகரின் மையத்தில் உள்ளது. 30181 சதுர அடிபரப்பில் 750 அடி நீளம் 252 அடி அகல அளவில் அமைந்துள்ள 


இக்கோயில் மூன்று பிரகாரங்களையும், கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் கோபுரங்களையும் கொண்டது. இதன் கிழக்கு கோபுரம் 128 அடி உயரத்தில் 9 அடுக்குகள் கொண்டது. 


தஞ்சையைச் சேர்ந்த அச்சுத நாயக்கன் 16 ஆம் நூற்றாண்டில் இதைப் புதுப்பித்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் கும்பேஸ்வரர். மங்களாம்பிகை மற்றும் முருகன் விநாயகரும் உடன் உறைகின்றனர். 


சூரியனார் கோயில்


கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் நடுநாயகமாக அமைந்துள்ளது. சூரியக் கடவுளுக்கென்று தனியாக அமைந்துள்ள கோயில் இது. திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலும் பிரசித்தி பெற்றது. தொலைபேசி: - 0435-2473349.


உப்பிலியப்பன் கோயில்


கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து 4 கல் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். உப்பிலியப்பரை பூமாதேவி முழந்தாளிட்டு வழிபடுவதை இங்கு காணலாம். அகோரத்ரா புஷ்கரணி, ஆர்தி 


புஷ்கரணி ஆகிய இரண்டு புண்ணியத் திருக்குளங்கள் இங்குள்ளன. விஷ்ணு விமானம் மற்றும் சுதானந்த விமானம் என்ற இரண்டு ரதங்களில் சுவாமி பவனி வருவார்.


சாரங்கபாணி கோயில்


சாரங்கபாணி கிழக்குத் தெருவில் உச்சிப்பிள்ளையார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளது. மகாவிஷ்ணுவுக்கு மூன்று முக்கியக் கோயில்களில் ஒன்றான இது நாயக்கர் ஆட்சிக்காலத்தில் 16 ஆம் 


நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் கோபுரம் 150 அடி உயரம் கொண்டது. ஐந்து பிரகாரங்களும் பொற்றாமரைக் குளமும் இங்கு உள்ளன.


சோமேசர் கோயில்


சாரங்கபாணி கோயிலின் தெற்கு பாகத்தில் உள்ளது. கிழக்கு நுழைவாயில் அருகில் வடக்குப் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த ஆலயம் சோழர்கால கட்டடக்கலையுடன் அமைந்துள்ளது. ஆறுமுகம் மற்றும் தேனார் மொழி அம்மை ஆகிய தெய்வங்களும் இங்கு உள்ளனர்.


நாகேஸ்வரர் கோயில்


13 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ஆதித்யனால் கட்டப்பட்டது. கூத்தாண்டவர் கோயில் என்ற பெயம் உண்டு. சித்திரை மாதம் மட்டும் சூரியக் கதிர்களை உள்ளே அனுமதிக்கும் சிறப்பான 


கட்டுமானத்தைக் கொண்டது இக்கோயில். இதனால் சூரியக் கோட்டம், கீழ்க்கோட்டம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.


இராமசாமி கோயில்


தஞ்சை அச்சுத நாயக்கரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு கோபுரம் ஒரு மகாமண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ள இந்தக் கோயில், பொற்றாமரைக் குளத்துக்குக் தென் கிழக்கிலும், உச்சிப் பிள்ளையார் கோயில் சந்திப்புக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. மகாமண்டபத்ததூண்களில் இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் 219 சுவரோவியங்களும் இராமாயண காட்சிகளை சித்தரிப்பதாக உள்ளன.


சக்கரபாணி கோயில் பெரியகடைவீதியில் காவிரிக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பகோணம் நகரில் உள்ள இரண்டாவது பெரிய வைணவக் கோயிலாகும். இக்கோயிலின் பிரகாரம் மச்சு, முகப்பாக அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

பாம்பு கடிக்கு முதலுதவி


பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.

விஷப்பரீச்சை

விசத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை உயிர்ப்பரீட்சை செய்து பார்ப்பது எப்படி.

கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்துவிட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.

தலைமயிரைப் பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். முருங்கை இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். உள்ளி - 10 கிராம். மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.

வெற்றிலை - 10 கிராம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். மிளகு - 10 கிராம். இவற்றுடன் சிறு குழந்தை சிறுநீர் விட்டு தட்டிப்பிழிந்து சாறு எடுத்து காதிலும் மூக்கிலும் நசியம் செய்ய விஷம் நீங்கும்.

தலை ரோமத்தைக் கருக்கி பசு வெண்ணெயில் குழப்பி கடித்த இடத்தில் நன்றாகத் தடவவேண்டும்.

மேலும் அம்மாம் பச்சரிசி - 10 கிராம்
தக்காளி வேர் - 10 கிராம்
நாயுருவி வேர் - 10 கிராம்
இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயில் பூசி வர விஷம் அறவே நீங்கும். அவதி அகலும்.


ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்
கவுதும்பை வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.

வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக் காக்கண வேர்ப்பட்டை இவை சம அளவு எடுத்து, குப்பைமேனி சாற்றில் அரைத்துக் கொள்ளவும். கழற்சிக்காயளவு உள்ளுக்குக் கொடுக்கவும். அதனையே மேலே தடவவும்.

நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்
சிறியா நங்கை வேர் - 20 கிராம்
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும். குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம் (மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு


தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.

இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி

தவழும் கவின்மிகு பூமி. தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம்

பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த

இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி

நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பனிப்பாறை எது தெரியுமா?

அண்டார்டிகா பகுதிக்கு அருகில் இருக்கும் பனிப்பாறைதான், உலகிலேயே மிகப்பெரியது. இதனுடைய பரப்பளவு, பெல்ஜியம் நாட்டின் பரப்பளவுக்கு இணையாக இருக்கும். ஈபில் டவர் உயரத்தை விட, அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக்கோங்க அதனால்தான் ஒரு பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பலே உடைந்து போனது. 

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes