Saturday, December 3, 2011

Tamil Science


ந்த 2010-ஆம் ஆண்டு முழுவதும் பல புதிய றிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. புதிய அறிவியல் கருத்துகள் உருவாக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை பார்க்கலாம்.

செயற்கை மழை சாத்தியமே!


சுற்றுப்புறவியல் விஞ்ஞானிகள் 1940-ஆம் ஆண்டு முதலே செயற்கை மழை உருவாக்க முயன்று வந்தனர். அதில் இதுவரை முழுமையான வெற்றி என்பது கானல்நீராகவே இருந்து வந்துள்ளது. சில்வர் அயோடைடு வேதிப்பொருளை மேகங்களின் மீது வானில் தூவுவது, மிக அதிகமான பரப்பில் உலர் பனிக்கட்டித் துகள்களை தூவுதல், உப்புத் துகள்களை மேகங்களின் மீது தூவி மேகங்களைக் குளிரச் செய்து நீர்த் திவலைகளை உண்டாக் குவது போன்ற செயற்கை முறைகளே இது வரை கையாளப்பட்டு வந்த கண்டுபிடிப்பு கள் ஆகும். அதாவது மேகங்களில் நீராவி யாக இருக்கும் நீர்த் திவலைகளை குளிரச் செய்து நீர்த் துளியாக மாற்று வதற்கு ஏதேனும் ஒரு பொருள் தேவைப் படுகிறது. இந்த முறைகள் பகுதி வெற்றியையே தந்துள்ளது. ஆனால் முழுமையான வெற்றியைத் தரவில்லை.

தற்போது ஜெனீவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்குழு  முற்றிலும் மாறுபட்ட புதிய நுட்பமான முறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அது லேசர் கதிர்களை பயன்படுத்தி மேகங்களை உண்டாக்கி மழை பொழியச் செய்வது.  இதன் ஒரு பகுதியாக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வகங்களிலும், வான்வெளியிலும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.

ஆய்வகத்தில், அதிக ஆற்றலை யுடைய வானிலிருந்து வரக்கூடிய, துணை அணுத்துகளான காஸ்மிக் கதிர்களை கண்டறியப் பயன்படும் மேக கலன் (கிளவுட் சேம்பர்) அல்லது அறையை உபயோகப்படுத்தினர். அதனுள் அதிக ஆற்றலுடைய துகள்களை செலுத் தும்போது, நீர்மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்களை விடுபடவைக்கிறது. இதனால் அது மின்னூட்டம் பெற்ற துகள்களாகி, ஒரு மெல்லிய தூசி போல செயல்பட்டு நீர்த் திவலைகளாக மாற உதவுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.

இவர்களைப் போலவே சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள், அதிக பலம் வாய்ந்த அகச் சிவப்பு லேசர் கதிர்களை கிளவுட் சேம்பர் (மேக அறை) உள்ளே செலுத்தும்போது கலன் - 240 சென்டி கிரேடாக அதன் வெப்பம் குளிர்ந்து நீராவி மேகம் உருவாகிறது. அந்த ஆய்வில் முதலில் 50 மைக்ரோ மீட்டர் விட்டமுடைய நீர்த் துளிகள் உருவாகி றது. அதன்பின் அடுத்த 3 நொடிகளில் அது 80 மை. மீ. விட்டமுடைய நீர் துளிகளாக மாறுகிறது. மேலும் லேசர் கதிர்களை வானில் செலுத்தும்போது நீராவி குளிர்வடைந்து நீர்த் துளிகளாக மாறுகிறது. இவ்வாறு குளிர்வடைவதை இரண்டாவதாக மற்றொரு லேசரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழை உருவாக்குவதில் சாதனை செய்துள்ளனர்.

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்


விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு  வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்காக, விஞ்ஞானிகள் ஐந்து வகை யான வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து அதன் சிறகுகளின் முப்பரிமாண உள்ள மைப்பு ஏடுகளை அறிய ஷ் - கதிர் ஒளிச் சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்  வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் கைராய்டு எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பி லானது எனவும், இந்த கைராய்டுகள் கிரிஸ் டல்கள் (படிகம்) போல செயல்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்து கிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை இரு பரிமாண எலெக்ட்ரான் நுண்ணோக்கிகளை கொண்டு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த ஆய்வில் ஒரு உறுதியான முன்னேற்றமின்றி இருந்தது. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் சிறப்பாக காணமுடிகிறது. அதுசரி இந்த கைராய்டுக்கு வருவோம். இந்த கைராய்டு  என்பது மின்விசிறியின் இலை போன்றது. தானாக பொருந்தக்கூடிய, நான்கு அடுக்கு களில் ஒன்று. இது நன்கு உறுதியான சிடின் என்னும் ஸ்டார்ச்சினால் ஆனதாகும். இந்த கைராய்டு அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் அமைந்துள்ள செல் ஏடு சவ்வானது வளர்ந்து செல்களின் உள்ளே மடித்து வைக்கப் படுகிறது. இந்த மடித்து வைக்கப்படும் சவ்வானது இரு கைராய்டுகளாக உருவாகிறது. வெளி மற்றும் உட்புற செல்களின் சவ்வு களானது இந்த இரு கைராய்டுகளையும் கண்ணாடி அமைப்புடைய வலைதளமாக மாற்றுகிறது. சிடின் வெளிப்புற கைராய்டில் சேமிக்கப்படுகிறது. இதனால் அது ஒரு திடப் படிகமாக மாறுகிறது.

பின்னர் அந்த செல் இறந்துபோவதால் ஒரு மிக நுண்ணிய அமைப்பினைக் கொண்ட ஒளி ஊடுருவும் தன்மையுடன் படிகம் உருவாகிறது. இந்த படிகம் போன்ற அமைப்பு ஒன்றை மற்றும் எதிரொளித்துவிட்டு ஒளியின் மற்ற எல்லா அலைநீளங்களையும் அதனுள் கடத்திவிடுகிறது.

கைராய்டின் அளவு நிறத்தை தீர்மானிக் கிறது. அதன் அமைப்பு சுருங்கும்போது நிறம் மங்கலாகவும் விரிவடையும் போது சிவப்பாகவும் மாறுகிறது. மேலும் பல நீண்ட காலம் நீடித்து நிலைக்கக் கூடியதும், மங்க லாகாததுமாகும் இதன் நிறம்.  இவ்வாறுதான் பட்டாம்பூச்சிகள்  நிறத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பண்பினால், ஒற்றை கைராய்டுகள் நுட்பத்தை கண்ணாடிகளிலும் சூரிய ஆற்றல் சேமிக்கும் தொழில்நுட்பத்திலும் பயன் படுத்தலாம். இதே நுட்பத்தை சிறந்த கண்ணாடி பொருள்கள் தயாரிப்பிலும், மிகச்சிறந்த சோலார் செல்கள் உருவாக்குவதிலும் பயன் படுத்தமுடியும்.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes